24 663461e73e586
ஏனையவை

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கான தகவல்

Share

இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கான தகவல்

நாட்டில் ஒவ்வொருவரும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவது சாதாரணமான விடயமாகும்.

எனினும் அரச அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் பலருக்கு தெரிவதில்லை.

இதன்காரணமாக சிலர் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைமைகளும் உள்ளன.

அதிலும் திருமணமானவர்கள், குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள தயார் நிலையில் உள்ளவர்கள் பலர் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைமைகள் உள்ளன.

அந்த வகையில் பார்க்கும் போது இலங்கையில் புதிதாக திருமணமானவர்கள் தாம் வசிக்கப் போகும் பிரதேசத்தின் MOH இல் பதிவு செய்வது கட்டாயமாகும்.

இதன்மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் தொடர்ந்து 3 மாதங்கள் போலிக் அமிலம் வழங்கப்படும்.

இது கட்டாய நடைமுறையாக பார்க்கப்படுகிறது. அத்துடன் கருவுற்றவர்கள் இது தொடர்பில் இரண்டு மாதம் பூர்த்தியாவதற்குள் தாம் வசிக்கும் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தருக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.

இதன்போது குடும்ப நல உத்தியோகத்தரால் கர்ப்பிணி தாய்மாருக்கு OGTT உள்ளிட்ட சில இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். OGTT என்பது கர்ப்பிணித்தாய்மார்களின் நீரிழிவு அளவினை பார்ப்பதற்கான பரிசோதனையாகும்.

இதற்கு முதல் நாள் இரவு 10 மணியுடன் ஆகாரம் எதுவும் உண்ணாது இருத்தல் அவசியமாகும். மறுநாள் காலை இரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

முதல் தடவை இரத்தம் எடுத்த பின்னர் 75g அளவுள்ள குளுக்கோஸ் ஒரு கோப்பை தண்ணீரில் கரைக்கப்பட்டு வழங்கப்படும். இதனை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் இரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மீண்டும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இரத்த பரிசோதனை செய்யப்படும்.

அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் பற்கள் தொடர்பான பரிசோதனை செய்வதும் கட்டாயமாகும். அதேவேளை இரத்த வகை என்ன என்பதை அறிந்திருப்பதும் கட்டாயமாகும்.

இதனை தொடர்ந்து மாதாந்தம் கர்ப்பிணிப் பெண்கள் மாதாந்த வைத்திய பரிசோதனைக்கு அழைக்கப்படுவதுடன், கணவன் மற்றும் மனைவிக்கு கர்ப்ப காலத்தில் மூன்று வகுப்புக்கள் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்ப்பிணிகள் தூரப் பிரயாணங்களில் ஏதேனும் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டால் வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதுடன், குடும்ப நல உத்தியோகத்தரால் வழங்கப்படும் அட்டைகள், கிளினிக் கொப்பிகள் மற்றும் மருந்துகள் என்பவற்றை உடன் எடுத்துச் செல்லுதல் அத்தியாவசியமாகும்.

Share
தொடர்புடையது
images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக...

images 6 1
ஏனையவை

ஜனவரி 5 முதல் மழை அதிகரிக்கும்: வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஜனவரி 05-ஆம் திகதி முதல்...

26 6958b2e786c0e
ஏனையவை

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்...

image 339b4818b7
ஏனையவை

மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிக்கத் திட்டம்: மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி – ஜனக ரத்நாயக்க கடும் சாடல்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார...