5 62
ஏனையவை

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

Share

வீட்டில் அழகு தாவரங்கள் வளர்ப்பது அனைவரும் விரும்பும் விடயமாகும்.

ஆனால், இவ்வாறு நாம் வளர்க்கும் தாவரங்கள் நமக்கு நம்மை பயக்குமா இல்லையா என்பது பற்றி பெரும்பாலும் யாரும் அறிவதில்லை.

சில தாவரங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருவது போல சில தாவரங்கள் துரதிர்ஷ்டத்தை மாத்திரமே வாறி வழங்கும்.

அந்த வகையில் வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் என்ன செடி வளர்க்களாம் வளர்க்க கூடாது என்பது பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வீட்டின் வாஸ்து சாஸ்திரப்படி துளசி மற்றும் மணி பிளான்ட் ஆகியன செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக் கூடிய தாவரங்களாகும்.

ரோஜா தவிர மற்ற முற் செடிகளை வீட்டில் வைக்கக் கூடாது. சிலர் கண்திருஷ்டி என்று சப்பாத்திக்கல்லி போன்ற செடிகளை வீட்டில் வைப்பாளர்கள். இவைகள் வீட்டில் வைக்கக் கூடாத செடிகளாகும்.

அதேநேரம், சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள் மற்றும் போன்சாய் மரங்களை வாஸ்து படி வீட்டிற்கு உட்புறம் வைக்கக் கூடாது. இவற்றை வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் அல்லது திறந்த வெளியான இடங்களிலேயே வைக்க வேண்டும்.

புளிய மரம் மற்றும் மருதாணி மரம் தீய சக்திகள் குடியிருக்கும் மரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டிற்கு அருகில் இந்த மரங்களை வைக்கக் கூடாது. இது கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

கருவேல மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு அருகில் கருவேல மரங்கள் இருப்பதும் தீய பலன்களையே ஏற்படுத்தும்.

பருத்தி, பருத்தி பட்டு செடிகள், பனை மரம் ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டை சுற்றி இந்த மரங்கள் இருப்பது அல்லது செடிகள் இருப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

அத்துடன், தொட்டிச் செடிகளை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பக்க சுவர்களுக்கு அருகில் வைக்கக் கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது எதிர்மறை சக்தியை வீட்டில் அதிகரிக்க செய்யும் என கூறப்படுகின்றது.

நமது வீடுகளில் அழகு தாவரங்கள் வளர்க்கும் போது நன்மை பயக்கும் தாவரங்களை வளர்ப்பது நமக்கு நன்மை பயக்கும். இன்றே வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தாவரங்களை வளர்க்க ஆரம்பியுங்கள்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...