வெனிசுலா சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்: அமெரிக்காவை விமர்சிக்கும் பாப்பரசர் 14 ஆம் லியோ!

cq5dam.thumbnail.cropped.750.422

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் 14 ஆம் லியோ தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

வத்திக்கானில் இருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையி, வெனிசுலா நாடு எவ்வித வெளிநாட்டுத் தலையீடுமின்றி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்க வேண்டும். மதுரோவின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

“வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகளை நான் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். அரசியல் மற்றும் சர்வதேச காரணிகளை விட, அங்குள்ள சாமானிய மக்களின் நலனே முதன்மையாகக் கருதப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பரசர் 14 ஆம் லியோ அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாய்நாடான அமெரிக்காவின் தீர்மானங்களையே துணிச்சலாக விமர்சித்து, சர்வதேச நீதிக்காக அவர் குரல் கொடுத்து வருவது உலகத் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெனிசுலாவில் அமைதி திரும்பவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவும் பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version