cq5dam.thumbnail.cropped.750.422
ஏனையவை

வெனிசுலா சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்: அமெரிக்காவை விமர்சிக்கும் பாப்பரசர் 14 ஆம் லியோ!

Share

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் 14 ஆம் லியோ தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

வத்திக்கானில் இருந்து அவர் விடுத்துள்ள அறிக்கையி, வெனிசுலா நாடு எவ்வித வெளிநாட்டுத் தலையீடுமின்றி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்க வேண்டும். மதுரோவின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

“வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகளை நான் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். அரசியல் மற்றும் சர்வதேச காரணிகளை விட, அங்குள்ள சாமானிய மக்களின் நலனே முதன்மையாகக் கருதப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பரசர் 14 ஆம் லியோ அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாய்நாடான அமெரிக்காவின் தீர்மானங்களையே துணிச்சலாக விமர்சித்து, சர்வதேச நீதிக்காக அவர் குரல் கொடுத்து வருவது உலகத் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெனிசுலாவில் அமைதி திரும்பவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவும் பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...