தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

30

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவைப்பட்டால் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு வசதியான ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகள் தற்போது அமைதியாக நடைபெறுவதால் தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version