ஏனையவை

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

18 14
Share

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை (Jaffna) மையமாகக் கொண்ட பிரபல ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி (Mattakkuliya) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் தொடர்பாக தனி நபர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளிய வீதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூரைச் சேர்ந்த இவர்கள் வடகிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘ஆவா’ கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு ‘ஆவா’ கும்பல் உறுப்பினர்களை அழைத்து வருமாறு டுபாயில் வசிக்கும் நபர் ஒருவரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு கும்பல் உறுப்பினர்களும் டுபாயில் இருந்த நபரை டிக்டொக் மூலம் மிரட்டியதும் தெரியவந்தது. இவர்களது தொலைபேசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​’ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவரையும் பெண் ஒருவர் மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டு, டுபாயில் உள்ள நபருக்கு அனுப்புவதற்காக காணொளி படம்பிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...