18 14
ஏனையவை

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

Share

ஆவா கும்பலைச் சேர்ந்த நால்வர் அதிரடியாக கைது

அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை (Jaffna) மையமாகக் கொண்ட பிரபல ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மட்டக்குளி (Mattakkuliya) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல் தொடர்பாக தனி நபர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளிய வீதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூரைச் சேர்ந்த இவர்கள் வடகிழக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘ஆவா’ கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு ‘ஆவா’ கும்பல் உறுப்பினர்களை அழைத்து வருமாறு டுபாயில் வசிக்கும் நபர் ஒருவரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு கும்பல் உறுப்பினர்களும் டுபாயில் இருந்த நபரை டிக்டொக் மூலம் மிரட்டியதும் தெரியவந்தது. இவர்களது தொலைபேசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​’ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவரையும் பெண் ஒருவர் மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டு, டுபாயில் உள்ள நபருக்கு அனுப்புவதற்காக காணொளி படம்பிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...

2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...