1 37
ஏனையவை

மட்டக்களப்பு வாகரையில் பூதவுடலை ஏற்ற மறுத்த அரசியல் கட்சியின் அமரர் ஊர்தியால் புதிய சர்ச்சை

Share

மட்டக்களப்பு வாகரையில் பூதவுடலை ஏற்ற மறுத்த அரசியல் கட்சியின் அமரர் ஊர்தியால் புதிய சர்ச்சை

மட்டக்களப்பு வாகரை பகுதியில் முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வாகரை பிரதேசத்தில், குறித்த காவு வண்டி ஒன்றை வாகரை வைத்தியசாலை வளாகத்தினுள் சில காலமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பூதவுடலை சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை அனுப்பும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.

எனினும், பூதவுடலை கொண்டுசெல்ல தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஓட்டமாவடியில் உள்ள வேறு ஒரு வண்டி மூலமே இந்த சேவை பெறப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சகல மக்களுக்கும் சமமான சேவையை வழங்காத ஒரு தனியார் ஊர்தியை எவ்வாறு வாகரை வைத்திய அதிகாரியும், பிராந்திய பணிப்பாளரும் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளேயே நிறுத்தி வைக்க அனுமதி வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...