1 37
ஏனையவை

மட்டக்களப்பு வாகரையில் பூதவுடலை ஏற்ற மறுத்த அரசியல் கட்சியின் அமரர் ஊர்தியால் புதிய சர்ச்சை

Share

மட்டக்களப்பு வாகரையில் பூதவுடலை ஏற்ற மறுத்த அரசியல் கட்சியின் அமரர் ஊர்தியால் புதிய சர்ச்சை

மட்டக்களப்பு வாகரை பகுதியில் முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வாகரை பிரதேசத்தில், குறித்த காவு வண்டி ஒன்றை வாகரை வைத்தியசாலை வளாகத்தினுள் சில காலமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, முக்கிய தமிழ் கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரின் தந்தை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பூதவுடலை சட்ட வைத்திய நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை அனுப்பும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.

எனினும், பூதவுடலை கொண்டுசெல்ல தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஓட்டமாவடியில் உள்ள வேறு ஒரு வண்டி மூலமே இந்த சேவை பெறப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சகல மக்களுக்கும் சமமான சேவையை வழங்காத ஒரு தனியார் ஊர்தியை எவ்வாறு வாகரை வைத்திய அதிகாரியும், பிராந்திய பணிப்பாளரும் வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளேயே நிறுத்தி வைக்க அனுமதி வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...