2 1 8
ஏனையவை

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி

Share

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாஸ் படமாக அமைந்தது அமரன் திரைப்படம். சமீபத்தில், வெளியான தமிழ் படங்களிலே அமரன் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முகுந்த் வரதராஜன் என்ற இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எந்த ஒரு விஷயத்தையும் சேர்க்காமல் உள்ளது உள்ளபடியே படத்தை எடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அமரன் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு முன் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் இன்று காலை மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...