16 20
ஏனையவை

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு – அச்சத்தில் அரசியல்வாதிகள்

Share

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு – அச்சத்தில் அரசியல்வாதிகள்

உயர் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்டியை சேர்ந்த மதுபான சில்லறை வர்த்தகர்களான சாமர சம்பத் அபேசேகர மற்றும் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்இ மதுவரிச்சட்டத்தை மீறி மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் பிரதிவாதிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தை மீறி பல மதுபான உரிமங்களை வழங்கியுள்ளனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுவரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும், அநீதியான முறையிலும் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் கீழ், கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளனர்.

அதேநேரம் முறையான வெளிப்படைத்தன்மையின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தை மீறி பல மதுபான உரிமங்களை வழங்கியுள்ளனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுவரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும், அநீதியான முறையிலும் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் கீழ், கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளனர். அதேநேரம் முறையான வெளிப்படைத்தன்மையின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரையில் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுவின் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மேலும், குறித்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த நடவடிக்கையின் மூலம் கலால் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...