4 36
ஏனையவை

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்

Share

பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

இது வழக்கத்திற்கு மாறான ஆணை என்றும், இதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கனேடியதமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மீண்டும் இனவாத, மதவாத, பிரிவினைவாதக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, ஐக்கிய நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணையின் மூலம் பொருளாதார நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு நியாயமான நாள் அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் மக்களைத் திரட்டி அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதே தேசிய சுதந்திர முன்னணியின் வகிபாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...