4 36
ஏனையவை

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்

Share

பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

இது வழக்கத்திற்கு மாறான ஆணை என்றும், இதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கனேடியதமிழ்ச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மீண்டும் இனவாத, மதவாத, பிரிவினைவாதக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, ஐக்கிய நாட்டில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணையின் மூலம் பொருளாதார நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு நியாயமான நாள் அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் மக்களைத் திரட்டி அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதே தேசிய சுதந்திர முன்னணியின் வகிபாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...