1751373259 fine
ஏனையவை

போக்குவரத்து அபராதங்களை இனி இணையவழியில் செலுத்தலாம்: ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் அமல்!

Share

எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதிக்குப் பின்னர், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ‘Govpay’ செயலி அல்லது இணையதளம் ஊடாகச் செலுத்தும் வசதி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இது குறித்து, சாரதிகள் இனி பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லாமல், Govpay தளம் ஊடாக நேரடியாக அபராதங்களைச் செலுத்த முடியும்.

ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு நேரடியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது பொலிஸ் துறையில் லஞ்சம் மற்றும் ஊழலைக் குறைக்க உதவும். போக்குவரத்துப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு இதற்கான டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனச் சுட்டிக்காட்டிய அவர், புதிய முறையினால் பொலிஸார் மீதான தேவையற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் மூலம் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தரவுகள் துல்லியமாகப் பேணப்படுவதுடன், பொதுமக்களுக்கான காலதாமதமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...