20 10
ஏனையவை

சர்ச்சையில் முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியல்!

Share

சர்ச்சையில் முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்ற பல கட்சிகள் இதுவரை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பவில்லை என தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெயர்களை அனுப்பி வைத்ததன் பின்னர் வர்த்தமானியில் பெயர்கள் வெளியிடப்பட உள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் 4 தேசியப்பட்டியல் பதவிகளும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒரு நாடாளுமன்ற பதவியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு நாடாளுமன்ற பதவியும் உள்ளன.

இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளதுடன், அதில் ஒன்றுக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை பெண்ணொருவருக்கு வழங்கினால் அதற்கு அவர் தகுதியானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்சியின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளர் ஷர்மிளா பெரேரா தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கும் தனது கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அக்கட்சி பெற்றிருந்த தேசியப்பட்டியல் பதவிக்கு தற்போதுள்ள தகுதிக்கு ஏற்ப செயற்படுவது தவறோ தன்னிச்சையான செயலோ அல்ல எனவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.

அத்தோடு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான பிரேரணை அதன் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...