24 6646eb113cecf
ஏனையவை

மதுபான விற்பனை உரிமங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரம்

Share

மதுபான விற்பனை உரிமங்களை பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரம்

அரசியல் பிளவுகளுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்கள் நண்பர்களினதோ உறவினர்களினதோ பெயர்களின் கீழ் மதுபான அனுமதிப் பத்திரங்களைப் பெற விரும்புகின்றனர் என மதுவரித்துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் புதிதாக 478 புதிய மதுபான விற்பனை நிலையங்களை நிறுவும் வகையில், மதுபான உரிமங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களில் உரிமங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், சிலர் இந்த அனுமதிகளை 50 மில்லியன் ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளார்கள்.

அதேவேளை, பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீற்றர் சுற்றளவில் எந்த மதுபான விற்பனையகங்களும் அனுமதிக்கப்படாது.

அத்துடன், மாநகரசபை பகுதிகளில் திறக்கப்படும் விற்பனையகங்களுக்கு 15 மில்லியன் ரூபாவும், நகர சபைக்குட்பட்ட பகுதிகளின் விற்பனையகங்களுக்கு 12.5 மில்லியன் ரூபாவும், பிரதேச சபையின் கீழ் வரும் விற்பனையகங்களுக்கு 10 மில்லியன் ரூபாவும் ஒருதடவை செலுத்தப்பட வேண்டும்.

அதேநேரம், வருடாந்த கட்டணங்களாக, மாநகரசபைக்கு உட்பட்ட விற்பனையகங்கள் 10 லட்சம் ரூபாவும், நகரசபை விற்பனையகங்கள் 8 லட்சம் ரூபாவும், பிரதேசசபை விற்பனையகங்கள் 6 இலட்ம் ரூபாவும் செலுத்தவேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...