15 12
ஏனையவை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மேல்முறையீடு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மேல்முறையீடு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிணை வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் (Imran Khan) தொடுத்த மேல்முறையீடுக்கமைய அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின், கடந்த 2022ம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது.

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அந்த மனுவை மீதான விசாரணை நேற்று (20) நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது பிணை வழங்கப்பட்டாலும் இம்ரான் கான் மீது பிற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கும், கடந்த ஒக்டோபர் 24-ஆம் திகதி இதே நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...