22 8
ஏனையவை

எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

Share

எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்

தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

குறித்த நடவடிக்கைகள் நேற்றும் (19) இன்றும் (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான வசதிகளை இலகுபடுத்தும் விதமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல், உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத்தை நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இணையவழி முறை (Online) ஊடாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் வசதியும் இம்முறை வழங்கப்பட்டிருந்தது.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளையதினம் (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...