ஏனையவை

தமிழ் தேசிய வாக்குகளை உள்ளீர்த்தார்களா அநுர தரப்பு! அளிக்கப்பட்ட விளக்கம்

4 1 1
Share

தமிழ் தேசிய வாக்குகளை உள்ளீர்த்தார்களா அநுர தரப்பு! அளிக்கப்பட்ட விளக்கம்

யாழில் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம்.

யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக் கட்சியாக வந்துள்ளது. இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பாக்காத வெற்றியாகும்.

வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை. தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...