24 3
ஏனையவை

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

Share

அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு

அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.14% வீதத்துடன் 350,429 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தேசியப்பட்டியல் தொகுதிக்கான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆசனங்களுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சானக மதுகொட காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...