ஏனையவை

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

Share
9 29
Share

முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறையும் கல்விமான்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்தியில் (NPP) இருந்து கல்விமான்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முதன் முறையாக வைத்தியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய துறைசார் வல்லுநர்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தியில் இருந்து 15 வைத்தியர்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், வைத்தியர். நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியர். நிஹால் அபேசிங்க, வைத்தியர். ரிஸ்வி சாலிஹ், வைத்தியர்.பிரசன்ன குணசேன, வைத்தியர். நாமல் சுதர்ஷன, வைத்தியர். நிஷாந்த சமரவீர, வைத்தியர்.தம்மிகா படபெந்தி, வைத்தியர்.சுசில் ரணசிங்க, வைத்தியர்.ஹன்சக விஜேமுனி, வைத்தியர்.எஸ். திலகநாதன், வைத்தியர்.மதுர செனவிரத்ன, வைத்தியர்.ஜனக சேனாரத்ன, வைத்தியர்.சண்டருவன் மதரசிங்க, வைத்தியர்.ஜகத் விக்கிரமரத்ன, வைத்தியர்.ஜகத் குணவர்தன.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியில் இருந்து ஆசிரியர்கள் உட்பட அதிபர்கள் 21 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சாந்த பத்மகுமார, மஞ்சுள சுரவீர ஆராச்சி, பத்மசிறி பண்டார, ரத்னசிறி சுனில், சுஜீவ திசாநாயக்க, சந்தன தென்னகோன், சஞ்சீவ ரணசிங்க, நந்த பண்டார, மஞ்சுளா ரத்நாயக்க, ருவன் விஜேவீர, சதுரி கங்கானி, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ரொஷான் அக்மீமன, முனீர் முலாஃபர், ஹேமாலி வீரசேகர, உபுல் கித்சிறி, டி.கே ஜெயசுந்தர, எஸ்.பிரதீப், அரவிந்த செனரத், ருவன் மாபலகம.

மேலும், தேசிய மக்கள் சக்தியில் இருந்து 16 வழக்கறிஞர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர்.

அந்த வகையில், சுனில் வதகல, ஹர்ஷன நாணயக்கார, சுசந்த தொடவத்த, நிலாந்தி கோட்டஹச்சி, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, ஹசர கம்மன லியனகே, உபுல் அபேவிக்ரம, அனுஷ்கா தர்ஷனி, கீதா ஹேரத், சாகரிகா அத்தாவுடா, பாக்ய ஸ்ரீ ஹேரத், துஷாரி ஜயசிங்க, பிரியந்த விஜேரத்ன, சரத் ​​குமார, நிலுஷா கமகே, ஹிருனி விஜேசிங்க.

இதேவேளை, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 10ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சென்ற 21 பெண்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...