333
ஏனையவை

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

Share

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் (Ravi Karunanayake) பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) தெரியாது என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும் எனவும் இதுதொடர்பில் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் நேற்று (18) காலியில் (Galle) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரள (Thalatha Atukorale) அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம்.

இதுதொடர்பில் உறுதியான தீரமானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் 3 3,4 உறுப்புரைகள், 97ஆம் உறுப்புரை, 137 மற்றும் 138ஆம் உறுப்புரைகளை மீறும் நடவடிக்கையாகும்.

எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம். எனினும் ரவி கருணாநாயக்கவின் இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமக்கு எதுவும் தெரியாது.

தலதா அத்துகோரளவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடி வந்தது. அது தொடர்பில் இன்று கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு இருந்த நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது.

என்றாலும் இந்த சர்ச்சை தொடர்பில் இன்று காலை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் அனைத்து கட்சி பிரதானிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும்“ என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
5 20
ஏனையவை

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம்...

1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....