11 14
ஏனையவை

தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Share

தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கான அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழு வழங்குமாறு கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி நாளை (17) தனது கட்சியின் தேசியப் பட்டியலை அறிவிக்க உள்ளது.

மேலும் இந்த ஆண்டு தேசிய பட்டியலில் இருந்து 05 நாடாளுமன்ற பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியதாகவும், அதற்காக யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவிகளை கைப்பற்றியுள்ளதுடன், அந்த நாடாளுமன்ற பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்ததோடு, அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.

இம்முறை புதிய கட்சியாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட சர்வஜன அதிகாரம் ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவியையும் வென்றுள்ளது.

இதன் படி, குறித்த கட்சியின் தேசிய செயற்குழு நாளை (17) கூடி தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் தலா ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் எனப் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் யார் என்பதை நாளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அறிவிக்கப் போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...