2 38
ஏனையவை

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

Share

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தின் போது கருத்து தெரிவித்த மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்துக்கள் ஆளும் தரப்பில் பெரும் வாத பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

நாடாளுமன்றில் இன்றைய உரையின் போது நாமல் ராஜபக்ச, ”முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு கிளீன் ஸ்ரீலங்கா என பெயரிடப்பட்டாலும் அது கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருக்களை கொண்டமைந்துள்ளது.

இந்த திட்டத்தில் முதலாவதாக, முச்சக்கர வண்டியின் சாரதிகளும், பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

விபத்துக்களை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

ஆனால் அந்த நடவடிக்கை தற்போது செயலிழந்துள்ளது. இது நிரந்தரமில்லாத திட்டமிடல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களுக்கான நிரந்தரமான திட்டத்தை முன்வையுங்கள். இது இன்று நிரந்தரம் இல்லாது போயுள்ளது.

மேலும் ராஜபக்சர்கள் மீது போலியான விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் பலிவாங்கல் நடவடிக்கை. இது நீதிக்கு புறம்பானது” என நாமல் குற்றம் சுமத்தினார்.

இதன்போது குறுக்கிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர், எமது விசாரணைகள் போலியானவை அல்ல. தாஜூடீனை கொலை செய்தது யார்? அதேபோல லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்?

அந்த உண்மைகளை இந்த நாடே அறியும்” என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாமல்,

“இந்த காலப்பகுதியில் தற்போதையை பொது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பான பதவியில் இருந்தார். அப்போது நீங்கள் முன்வைக்கும் இந்த குற்றச்சட்டுகளுக்கு என்ன ஆனது? என்றார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...