2 38
ஏனையவை

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

Share

தாஜூடீனை கொலை செய்தது யார்! நாமலின் கருத்தால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுவரும் கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தின் போது கருத்து தெரிவித்த மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கருத்துக்கள் ஆளும் தரப்பில் பெரும் வாத பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

நாடாளுமன்றில் இன்றைய உரையின் போது நாமல் ராஜபக்ச, ”முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு கிளீன் ஸ்ரீலங்கா என பெயரிடப்பட்டாலும் அது கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருக்களை கொண்டமைந்துள்ளது.

இந்த திட்டத்தில் முதலாவதாக, முச்சக்கர வண்டியின் சாரதிகளும், பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

விபத்துக்களை ஏற்படுத்தும் அலங்கார பொருட்களை அகற்றவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

ஆனால் அந்த நடவடிக்கை தற்போது செயலிழந்துள்ளது. இது நிரந்தரமில்லாத திட்டமிடல் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களுக்கான நிரந்தரமான திட்டத்தை முன்வையுங்கள். இது இன்று நிரந்தரம் இல்லாது போயுள்ளது.

மேலும் ராஜபக்சர்கள் மீது போலியான விசாரணைகள் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு அரசியல் பலிவாங்கல் நடவடிக்கை. இது நீதிக்கு புறம்பானது” என நாமல் குற்றம் சுமத்தினார்.

இதன்போது குறுக்கிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர், எமது விசாரணைகள் போலியானவை அல்ல. தாஜூடீனை கொலை செய்தது யார்? அதேபோல லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யார்?

அந்த உண்மைகளை இந்த நாடே அறியும்” என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாமல்,

“இந்த காலப்பகுதியில் தற்போதையை பொது பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பான பதவியில் இருந்தார். அப்போது நீங்கள் முன்வைக்கும் இந்த குற்றச்சட்டுகளுக்கு என்ன ஆனது? என்றார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...