இலங்கைஏனையவைசெய்திகள்

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

24 6674cf371fadc 1
Share

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று) தெரிவித்துள்ளனர்.

நீல நிறத்தில் உள்ள இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானில் மெதுவாக மிதந்து வருவதாகவும், வவுனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் அவை தென்படுவதாகவும் கூறியுள்ளனர்.

வானத்தில் மெதுவாக மிதக்கும் இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாகவும், அந்த இரண்டு மர்மப் பொருட்களும் நிலப்பரப்பை விட கடலில் நன்றாகவே தென்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதே போன்ற பல பொருட்கள் வானில் மிதந்ததாகவும், சுனாமியின் பின்னர் அவை காணாமல்போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு மர்மப் பொருட்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விவரங்களை அவர்கள் கொழும்பில் சமர்ப்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...