இலங்கைஏனையவைசெய்திகள்

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

Share
24 6674cf371fadc 1
Share

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று) தெரிவித்துள்ளனர்.

நீல நிறத்தில் உள்ள இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானில் மெதுவாக மிதந்து வருவதாகவும், வவுனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் அவை தென்படுவதாகவும் கூறியுள்ளனர்.

வானத்தில் மெதுவாக மிதக்கும் இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாகவும், அந்த இரண்டு மர்மப் பொருட்களும் நிலப்பரப்பை விட கடலில் நன்றாகவே தென்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதே போன்ற பல பொருட்கள் வானில் மிதந்ததாகவும், சுனாமியின் பின்னர் அவை காணாமல்போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு மர்மப் பொருட்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விவரங்களை அவர்கள் கொழும்பில் சமர்ப்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...