rtjy 248 scaled
ஏனையவை

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

Share

நாடாளுமன்றத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் தகாத வார்த்தையால் பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தணிக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித்தை டயானா கமகே தாக்க முற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் (20.10.2023) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...