தகாத செயற்பாடுகள் – மானிப்பாயில் பெண்கள் உட்பட மூவர் கைது!!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் அந்த வீட்டை சோதனை நடத்தினர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 55 மற்றும் 51 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

#SrilankaNews

 

 

Exit mobile version