tamilni 167 scaled
ஏனையவை

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

Share

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர்.

பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலரை பிரான்ஸ் நாட்டு பொலிசார் தடுத்துள்ளனர்.

அப்போது புலம்பெயர்வோர் சிலர் பொலிசார் மீது பாறைகளைத் தூக்கி வீசியுள்ளனர். சிலர் கட்டைகளைக் காட்டி பொலிசாரை மிரட்டிவிட்டு படகில் ஏறி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

பொலிசார் உடலில் அணிந்திருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவல் பிரித்தானிய தரப்பைச் சென்றடைய, அங்கு தயாராக காத்திருந்த பிரித்தானிய பொலிசார் Salih Abdullah (33) மற்றும் Ahmed Khater (25) என்னும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் விதி மீறி பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் முறையே 14, 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்துல்லா ஈராக்கையும், அஹமது சூடானையும் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பிரித்தானியாவுக்குள் சிறு படகொன்றில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 51 பேர் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...