25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் முறைகேடான வழிகளில் சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024ம் ஆண்டின் டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் தினத்தை முன்னிட்டு 332 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்திருந்தார்.

எனினும், அன்றையதினம் 389 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் 57 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அதே போன்று கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செயற்பாட்டின் போது 11 கைதிகள் மேலதிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தனர்

அத்துடன், தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வெசாக் தின பொதுமன்னிப்பின் கீழ் 388 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

எனினும், அதரற்கு மேலதிகமாக 26 கைதிகள் ஜனாதிபதியின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...