tamilni 511 scaled
ஏனையவை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தங்க பிஸ்கட்கள்

Share

ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான 66 Tentolas எனப்படும் தங்க பிஸ்கட்டுகளை விமான நிலைய புறப்பாடு முனையத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 04.00 மணியளவில் விமான நிலைய சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என்பதுடன் அவர் இலங்கை கேட்டரிங் நிறுவனத்தில் சுமார் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்த நபர் பவர் பேங்க் அளவுள்ள தங்க பிஸ்கட்களை பொதி செய்ததாகவும், இதுபோன்ற இரண்டு பைகளை, முதுகுவலியைப் போக்கப் பயன்படும் ஆடையில் புத்திசாலித்தனமாக மறைத்து, இடுப்பில் அணிந்து, உள்ளாடையால் மறைத்து சூட்சுமமான முறையில் எடுத்து செல்ல முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் உள்ள பொதி பிரிவில் அவற்றை மறைத்து வைத்துவிட்டு, தனது பணிகளை முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின் புறப்படும் முனையத்தில் இருந்து எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு சுங்க பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் பொருட்களுடன் சிக்கியுள்ளார்.

Tentolas வகையைச் சேர்ந்த இந்த 24 கேரட் தங்க பிஸ்கட் 116.62 கிராம் எடை கொண்டது. இவ்வாறு பிடிபட்ட அனைத்து தங்க பிஸ்கட்டுகளின் மொத்த எடை 7 கிலோ 7 கிராமாகும்.

சந்தேகநபர் சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, தேவையான வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், தேவையான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...