18 15
ஏனையவை

E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சில தரப்பினரின் தலையீடு மற்றும் E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்டு பணிபுரிவதால், தென்கொரியாவில் வேலைவாய்ப்பிற்காக வேலைகளுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த விடயம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (20) பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பணியாளர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

அதன்போது, தென் கொரியாவில் E-8 விசா முறையின் கீழ் பணியாளர்களை பரிந்துரைப்பது குறித்து மேலும் ஆய்வு செய்யவும், அது தொடர்பான சட்ட நிலைமையை கண்டறிந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...