18 15
ஏனையவை

E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சில தரப்பினரின் தலையீடு மற்றும் E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்டு பணிபுரிவதால், தென்கொரியாவில் வேலைவாய்ப்பிற்காக வேலைகளுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த விடயம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (20) பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பணியாளர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

அதன்போது, தென் கொரியாவில் E-8 விசா முறையின் கீழ் பணியாளர்களை பரிந்துரைப்பது குறித்து மேலும் ஆய்வு செய்யவும், அது தொடர்பான சட்ட நிலைமையை கண்டறிந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...