rtjy 48 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை

Share

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.09.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பான தகவல்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

அரசாங்கமே இந்த தகவல்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். எனவே சனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து சர்வதேச விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என அரசாங்க அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இன்றைய தினம் கூறியதாகவும், இந்த கூற்றின் மூலம் அவர் கர்தினாலை இழிவுப்படுத்தி உள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...