24 666121e57a3dd
ஏனையவை

பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை – குவியும் வாழ்த்துக்கள்

Share

பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை – குவியும் வாழ்த்துக்கள்

முல்லைத்தீவில் தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் பிள்ளையை பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் குழந்தையை கொடூரமான முறையில் தந்தை தாக்கியது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையுடன் தாக்குதலுக்கு துணை புரிந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பொலிஸாரின் பாராமரிப்பில் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் 04 வயது 06 மாத வயதுடைய சிறுமி உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு பல அழுத்தங்களுக்கு முகங்கொடுத்த சிறுமியை, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.

பொலிஸ் சீருடை அணிந்த பெண்ணுக்குள் மலர்ந்த தாய்மை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குழந்தையின் பெற்றோரை விட பல மடங்கு அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1 9
ஏனையவை

ஸ்டாலினின் அரசியல் நாடகம்.. கச்சத்தீவு ஒரு சாக்கு.. அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கரூர் விவகாரத்தில் தனது அரச நிர்வாகத் தோல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, கச்சத்தீவை மீட்பது பற்றிப் பேசுவதன்...

3 9
ஏனையவை

திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில் வந்து போகும் நாமல், மகிந்த

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்சர்களை சிறையில் அடைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

5
ஏனையவை

கரூர் சம்பவம்.. இரவுக்குள் கைது? விஜய்க்கு வந்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகர் விஜய் அரசியல் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மற்றும் கரூருக்கு சென்று...

6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...