tamilnig scaled
ஏனையவை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.

இருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மட்டும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு நீதவான் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்படுவதாக நீதவானிடம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் தமக்கு தேவையான பிணையை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தனர். இது தொடர்பில் நீதிமன்றில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்றைய தினமாக ஆறாம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று முன் பிணை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...