26 5
ஏனையவை

கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேற கூறிய காலிஸ்தானியர்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

Share

கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேற கூறிய காலிஸ்தானியர்கள்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

கனடாவில்(Canada) வாழும் கனேடிய மக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தானியர்கள் தெரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளியில், “இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள்(கனேடியரகள்) திரும்பி செல்லுங்கள்.

வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு, திரும்பி செல்லுங்கள். நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்,” என காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன் அவர்கள் “ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சையை ஏற்படுத்திய காலிஸ்தானியர்களின் காணொளி வெளியாகியுள்ளது.

காலிஸ்தான் அமைப்பின் உறுப்பினரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...