7 32
ஏனையவை

கங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு

Share

கங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு

கடந்த 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களை படத்தின் மீது வைத்தனர்.

இன்னும் சிலர், படத்தை கலாய்த்து வந்தனர். படத்தின் சவுண்ட் இரைச்சலாக இருக்கிறது, கத்திகொண்டே இருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மையானவர்களின் விமர்சனமாக இருந்தது.

அதற்காக தயாரிப்பாளர் ஞானவேல், திரையரங்கில் இனி திரையிடப்படும் காட்சிகளில் இரண்டு புள்ளிகள் சவுண்ட் குறைக்கப்படும் என கூறியிருந்தார். மேலும் எமோஷனல் காட்சிகளும் கனெக்ட் ஆகவில்லை என்றும் விமர்சனங்களை வெளிவந்தது.

இந்த நிலையில், சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் “கங்குவா படத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்படுகிறது. 3 மணி நேர படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே சரியில்லை. கங்குவா படத்தின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது, அதிர்ச்சியளிக்கிறது. கங்குவா படத்திலுள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?” என பதிவு செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...