tamilni Recovered scaled
ஏனையவை

விஜய் மகன் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.. உண்மையா? இல்லை உருட்டா?

Share

விஜய் மகன் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.. உண்மையா? இல்லை உருட்டா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.

ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் கூட சஞ்சய்யின் பிறந்தநாள் அன்று லைகா நிறுவனம் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்கப்போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின் அது உண்மையில்லை என தெரியவந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்றும், ஹீரோயினாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். மேலும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் கமிட்டாகியுள்ளாராம்.

இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வரும், இவை அனைத்துமே பொய் தான், இதில் எதுவும் உண்மையில்லை, வெரும் வதந்தி மட்டுமே என தெரியவந்துள்ளது. ஆம், இது முழுக்க முழுக்க தவறான தகவல் மட்டுமே. படத்தின் நடிக்கப்போகும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

ள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...