ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

9 5

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரிவால் நடத்தப்படும் வெளிவாரி பட்டப்படிப்பு கருத்தரங்குகள் மற்றும் பதிவு நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பொது நிறுவனங்கள் குழு (COPE) சமீபத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நிதி முறைகேடுகள் இருப்பதை வெளிப்படுத்தியது.

இந்தநிலையில், சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் COPE குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், பதில் தணிக்கையாளர் ஜெனரல் ஜி.எச்.டி. தர்மபால, வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நடந்த நிதி முறைகேடுகள் காரணமாக மாணவர்கள் அனைத்துச் செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version