10 24
ஏனையவை

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

Share

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

இந்த சாளரம் இன்றும் நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தகவல் ஆவணங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கு புகைப்படங்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகளை எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவிக்கையில், “அன்றைய தினம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்து அல்லது நிகழ்நிலையில் எமக்கு தகவல் வழங்கி பதிவு செய்துக் கொள்ளலாம்.

கைரேகைகளை பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் இந்த வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் நடைமுறை, நடத்தை மரியாதை மற்றும் எவ்வாறு செயல்பட வேண்டும்  குழுக்களின் வடிவம் மற்றும் விவாத விதிகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் முறைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க மூன்று நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...