tamilni 374 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

Share

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளன.

பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன.

இப்போது சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசமும் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளது.

அதன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை தடை செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை ஒரு வருடத்திற்கு (மே 15, 2025 வரை) அமுலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றில் ஆபத்தான நிறங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு எதிரானவை என்று அறிக்கை வெளிப்படுத்தியது.

இவை பொது சுகாதாரத்தில், குறிப்பாக சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...