tamilni 374 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

Share

பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த மற்றொரு மாநிலம்

பஞ்சு மிட்டாய்.. இந்தப் பெயரைக் கேட்டாலே குழந்தைகள் துள்ளிக் குதிக்கின்றன. வாயில் கரையும் இந்த பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் பல மாநிலங்கள் சமீபத்தில் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளன.

பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன.

இப்போது சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசமும் இந்த பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்துள்ளது.

அதன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை தடை செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை ஒரு வருடத்திற்கு (மே 15, 2025 வரை) அமுலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றில் ஆபத்தான நிறங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு எதிரானவை என்று அறிக்கை வெளிப்படுத்தியது.

இவை பொது சுகாதாரத்தில், குறிப்பாக சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...