2 23
ஏனையவை

நான்கே வருடங்களில் இலங்கையின் டொலர் கையிருப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

Share

நான்கே வருடங்களில் இலங்கையின் டொலர் கையிருப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 2020க்குப் பிறகு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளின் அளவு 6 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், செப்டம்பர் 2024 இல் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களின் அளவு ஒக்டோபர் 2024 இறுதிக்குள் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் 7.9 வீதம் கணிசமான அதிகரிப்பு என மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில் 7.3 சதவீதம் அதிகரித்து 6.38 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

குறித்த தொகையானது, 2024 செப்டம்பரில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 5.8 வீதத்தால் 42 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில்சீன மக்கள் வங்கியின் அந்நிய செலாவணி வசதியும் அடங்கும், இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமன் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...