tamilnih 16 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோருக்கு ஒரு அறிவிப்பு

Share

பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோருக்கு ஒரு அறிவிப்பு

பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோர், பிரித்தானியாவிலிருந்தபடியே தம் சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எளிமையாகக் கூறினால், Visitor Visaவில் வருவோர், தாங்கள் தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்கவேண்டிய சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடரலாம்.

சுற்றுலாவுக்காக, தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருவோர், சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடரலாம். இந்த சலுகை, 2024, ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது.

அதாவது, அவர்களுடைய முதன்மையான நோக்கம் பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தங்கள் சொந்த நாட்டில் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது. அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருந்து, அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு.

இன்னும் தெளிவாகக் கூறினால், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவற்றிற்கு பதிலளிப்பது, காணொளிமூலம் கூட்டங்களில் பங்கேற்பது முதலான தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணிகளைச் செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது, அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...