Tamil News large 3494401
ஏனையவை

கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!

Share

கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர்.

இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று இளையராஜா நினைத்தார்.

இதனால், பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டி அவரது உருவச்சிலையை நிறுவினார். அதுமட்டுமல்லாமல், தினமும் மனைவியின் சிலையை வணங்கி வருகிறார். மேலும், சிவன் கோயிலையும் உருவாக்கி இஷ்ட தெய்வங்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இது குறித்து கணவர் இளையராஜா கூறுகையில், “பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் செய்து வந்த கலைச்செல்வி கடவுளிடம் தஞ்சம் அடைந்து விட்டார். அதனால், மனைவியின் நினைவாக கோயில் கட்டி வருவதாகவும், கார்த்திகை, பௌர்ணமி போன்ற முக்கியமான நாள்களில் அன்னதானம் வழங்குவதாகவும்” கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...