5 36
ஏனையவை

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை

Share

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை

வவுனியாவில் (Vavuniya) மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படதுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16.11.2024) மாலை வவுனியா – தாண்டிக்குளம், குளப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன், அந்த பகுதி கமக்காரர் அமைப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கமக்காரர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மற்றும் சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மலர்சாலையின் உரிமையாளர் வரும்வரையில் வாகனத்தை நகரவிடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அகன்று சென்றனர். இதேவேளை குறித்த கழிவுகளை வவுனியா கண்டிவீதிக்கு அண்மையில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் இருந்தே எடுத்து வந்ததாக அதனை கொண்டுவந்த நபர் பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் அவர் கொண்டு வந்த கழிவுப்பொதிகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...