13 12
ஏனையவை

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

Share

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

கம்பஹா மாவட்டத்தில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் விஜித ஹேரத் (Vijitha Herath), இவ்வருட பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 898,759 வாக்குகளையும் அதில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெறும்.

இந்த நிலையில், இதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் பெற்ற 655,289 விருப்பு வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

எனினும், சற்று முன்னர் கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளை பெற்று பிரதமர் ஹரிணியின் விருப்பு வாக்கு எண்ணிக்கையும் கடந்து வரலாறு படைத்துள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த முன்னாள் மகிந்த ராஜபக்சவின் சாதனையை இம்முறை பிரதமர் ஹிரிணி முன்னதாகவே தகர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...