22 7
ஏனையவை

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

Share

மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரிய

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Harini Amarasuriya) முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கள் பிரதமரின் பொறுப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் பெற்ற 655,289 விருப்பு வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார்.

இதேவேளை, விஜித ஹேரத் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக கம்பஹா மாவட்டத்தில் இருந்து விஜித ஹேரத் பெற்ற விருப்பு வாக்குகள் வரலாற்றில் இடம்பெறுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது, தமிழ் மொழியில் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) சத்தியபிரமாணத்தை செய்துகொண்டார்.

மேலும், சுனில் ஹதுன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...