1200870 world 01
உலகம்ஏனையவைசெய்திகள்

மர்ம நபர்களின் திடீர் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பரிதாப பலி, மூவர் கவலைக்கிடம்

Share

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி Sadda Bazzar.

இங்கு திடீர் துப்பாக்கிச்சூடு நடந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் பயணிகள் கோச் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். எந்த அமைப்பும் இந்த வன்முறை செயலுக்கு உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

எனினும், பொலிஸார் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைபர் பக்துன்க்வா பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் இது மற்றுமொரு சம்பவமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் (2023) மட்டும், இப்பகுதி 419 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது. இதில் 620 பேர் உயிரிழந்தனர் மற்றும் 977 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...