உலகம்ஏனையவைசெய்திகள்

மர்ம நபர்களின் திடீர் துப்பாக்கிச்சூடு! 4 பேர் பரிதாப பலி, மூவர் கவலைக்கிடம்

Share
1200870 world 01
Share

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதி Sadda Bazzar.

இங்கு திடீர் துப்பாக்கிச்சூடு நடந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் மற்றும் பயணிகள் கோச் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். எந்த அமைப்பும் இந்த வன்முறை செயலுக்கு உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

எனினும், பொலிஸார் இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைபர் பக்துன்க்வா பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் இது மற்றுமொரு சம்பவமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் (2023) மட்டும், இப்பகுதி 419 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது. இதில் 620 பேர் உயிரிழந்தனர் மற்றும் 977 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...