2 31
ஏனையவை

கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

Share

கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீட்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கும் மாபியாக்களுக்கு இனிமேல் அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போகும் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...