2 31
ஏனையவை

கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

Share

கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் செல்வங்கள்: மீட்டு வர களமிறங்கும் அநுர அரசு

நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் மீட்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களை பிழிந்து எடுத்துக் கொண்டிருக்கும் மாபியாக்களுக்கு இனிமேல் அவர்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போகும் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்காலத்தில் மக்கள் குறைந்த விலையிலும் தட்டுப்பாடு இன்றி பொருட்களையும் வாங்கக்கூடிய சந்தை உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...